வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர் ஜோதிர்லதா கிரிஜா பெண்கள் கண்ணியமாக உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆணாயினும், பெண்ணாயினும் உடுக்கும் உடையும், பாணியும் தனிப்பட்ட உரிமைதான். ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்களின் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால், காரணங்களை ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் இந்த உடைக் கட்டுப்பாட்டை எதிர்க்க மாட்டார்கள்.
|