Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Thursday July 17, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்

வே.சபாநாயகம்


1. உலகத்துப் பொருள்களை நேர் நின்று நீயே பார். உனக்குப் புதிதாக ஏதாவது தோன்றலாம். பழைய உவமைகளும் கருத்துக்களுமே அதிலிருந்து உதிக்க வேண்டு மென்பதில்லை. உன் அனுபவம் எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு பொருளிலும் எப்போதும் ரகசியம் பதுங்கிக் கிடக்கிறது.

2. மக்கள் கூட்டம் பலசுவைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு. அவர்கள் நம்மை வேண்டிக் கேட்பவை இப்படி இருக்கின்றன:

"எனக்கு ஆறுதல் கொடு"

"என்னை மகிழ்ச்சிப்படுத்து"

"சோகத்தின் பிடியில் என்னைச் சிக்கவிடு"

"என் நெஞ்ச உணர்ச்சியைத் தொடு"

"என்னைக் கனவுலகத்திலே மிதக்க விடு"

"என்னக் கெக்கலி கொட்டிச் சிரிக்க வை"

"என்னை அச்சுறுத்து"

"என்னை அழ வை"

"என்னைச் சிந்திக்க வை".

3. இவற்றைத் தவிர ஏதோ மிகச் சிலர் இன்னொன்றைக் கூறுகிறார்கள்: "கலைஞனே! உனக்குப் பிடித்த முறையிலே - உன் உணர்ச்சி வெள்ளத்திற்கு இயைந்த வகையிலே எதையாவது நல்லதைக் கொடு" என்பதுதான். கலைஞன் இதற்கான முயற்சியிலே ஈடுபடுகிறான்; வெற்றி பெறுகிறான்; அல்லது தோற்றுத் தொலைகிறான்.

4. சிறுகதை என்பது ஒரு கெட்டுப் போன கலைக்குழந்தை.

(இன்னும் வரும்)




Copyright:thinnai.com 
Design element  

Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.