Thursday March 5, 2009
திரு. அப்துல் கையூம் "இடைவேளை" சுகமாகவும் நகையாகவும் இருந்தது
தவநெறிச்செல்வன்
அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு
"இடைவேளை" மிக சுகமாகவும் நகையாகவும் இருந்தது, என்றைய கவியரசுக்கும் , இன்றைய கவிபேரரசுக்கும் இடையை வர்ணிக்கிற அழகில் எத்தனை வேறுபாடுகள் அதனை மிக அழகாக விளக்கியிருந்தார் திரு. அப்துல் கையூம்.
//சீர் வரிசை தேடி வருவாரோ..
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ..”
என்ற வரிகளில் “உள்ளத்தழகை பார்க்காமல், உடலழகை மட்டும் மோகிக்கும்
கணவன் வாய்த்து விட்டால் நம் நிலைமை என்னாகுமோ? ஏதாகுமோ?” என்று
நாயகி கவலையுறுகையில் நமக்கும் அவள் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது,//
இந்த மாதிரி மிக அழகாக இப்போது எழுத முடியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
கம்பனின் காமரசத்தையும் ஆசிரியர் மிக அழகாக கையாண்டிருக்கிறார் மிகவும் ரசிக்க கூடியதாக இருந்தது கட்டுரை
தவநெறிச்செல்வன்
Copyright:thinnai.com